Kathir News
Begin typing your search above and press return to search.

தாவூத் இப்ராஹிம் பஞ்சாபில் பதுங்கி உள்ளாரா? - அதிரடி வேட்டையில் அமலாக்கப்பிரிவு

தாவூத் இப்ராஹிம் பஞ்சாபில் பதுங்கி உள்ளாரா? - அதிரடி வேட்டையில் அமலாக்கப்பிரிவு

Mohan RajBy : Mohan Raj

  |  15 Feb 2022 10:30 AM GMT

மும்பையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாவூத் இப்ராஹிம் சகோதரி இல்லம் உட்பட 10 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.


தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் தாவூத் கும்பலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது, அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தாவூத் இப்ராஹிம் செயல்பாடுகள் பஞ்சாபில் இருப்பதையும் தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புடன் சேர்ந்து கொண்டு பஞ்சாபில் தீவிரவாதத்தை தாவூத் இப்ராகிம் பரப்புவதாக தேசிய புலனாய்வு முகமை கருதுகிறது.


இந்நிலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலையிலேயே மும்பையில் தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தினர், இதில் தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் இல்லத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஹசீனா வீடு மட்டுமல்லாது மும்பை முழுவதும் 10 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாபில் கிடைத்த சில முக்கிய தகவல்கள் குறித்து உறுதி செய்து கொள்வதற்காக இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கப்பரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News