பிரச்சார மேடையிலேயே அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைந்த தே.மு.தி.க வேட்பாளர்
By : Mohan Raj
தே.மு.தி.க'வின் வேட்பாளர் வெம்படியான் இன்று காலை பா.ஜ.க'வில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19'ஆம் தேதி நடைபெறுகிறது இந்நிலையில் பல கட்சிகள் களத்தில் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றன சில வேட்பாளர்கள் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மணலி பகுதியில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது மணலி பெரிய தோப்பு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது தே.மு.தி.க வேட்பாளர் வெம்படியான் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் அங்கு வந்தார், அவர் அண்ணாமலையிடம் வேனில் ஏறி சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக தெரிவித்தார், பின்னர் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்தார். இதனால் அந்த பிரச்சார வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுக் கட்சியை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைந்தது மக்களிடம் மட்டுமல்லாது மாற்று கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.