Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் அரசு நிலத்தில் இயேசு கிறிஸ்து சிலை - இடித்துத் தள்ளிய அதிகாரிகள்

கர்நாடகாவில் அரசு நிலத்தில் இயேசு கிறிஸ்து சிலை - இடித்துத் தள்ளிய அதிகாரிகள்

Mohan RajBy : Mohan Raj

  |  21 Feb 2022 12:00 PM GMT

கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இயேசு சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.


கோலார் மாவட்டம் முல்பாகல் நகரிலுள்ள கோகுண்டே என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த இயேசுகிறிஸ்துவின் சிலையை உள்ளூர் நிர்வாகம் இடித்தது, முல்பாகல் தாசில்தார் உத்தரவின்பேரில் தாலுகா நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இயேசு சிலை இடித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன, கால்நடைகளை மேய்ச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தில் கட்டப்பட்ட சிலையை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.


இதற்கிடையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சில இடிப்பு சட்டவிரோதமானது என உள்ளூர் கிறிஸ்தவர்கள் கூறிவந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே சிலையை இடித்தோம் என தாசில்தார் சோபிதா கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் கூறும்பொழுது 'எங்களிடம் சொன்னால் நாங்கள் சிலையை அகற்றி இருப்போம் அல்லது வேறு வழியில் அகற்றலாம் இப்படி உடைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என கூறினர். ஆனால் வழக்கு இருப்பது தெரிந்தும் கிருஸ்துவர்கள் அகற்றாமல் இருந்தது குறிப்பிடதக்கது.


Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News