Kathir News
Begin typing your search above and press return to search.

ஓட்டு போடாததால் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. எம்.எல்.ஏ., மனைவியின் ஆதரவாளர்கள்!

ஓட்டு போடாததால் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. எம்.எல்.ஏ., மனைவியின் ஆதரவாளர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  25 Feb 2022 12:32 PM GMT

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. மனைவி கொடுத்த புடவைகளை குப்பையில் விசி எறிந்து பெண்கள் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பழையூரில் மகாலட்சுமி பாபு என்பவர் சுயேட்சையாக 197வது மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவின் மனைவி ஆவார். இதனிடையே திமுக கூட்டணியில் வாய்ப்பு மகாலட்சுமிக்கு வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக களம் கண்டார்.

https://fb.watch/borMfBDA7G/

இதன் பின்னர் திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக மகாலட்சுமி பாபு போட்டியிட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பொங்கல் பரிசு எனக்கூறி மகாலட்சுமி புடவைகளை வழங்கினார். தேர்தல் முடிவுகள் வெளியானதில் அதிமுக வேட்பாளர் மேனகா சங்கர் என்பவர் வெற்றி பெற்றார். இதற்காக அதிமுகவினர் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற மகாலட்சுமியின் ஆதரவாளர்கள் இதனை பார்த்த உடன் கோபத்தின் உச்சிக்கு சென்றனர். அங்கு இருந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலும், எங்களிடம் புடவை வாங்கிக்கொண்டு வாக்களிக்காமல் ஏமாற்றியுள்ளனர். அது மட்டுமின்றி ஆபாசமாக பேசினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அனைவரும் பொங்கல் பரிசு என்று கொடுத்த புடவைகளை அங்கிருந்த குப்பை தொட்டியில் வீசி எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: DT Next

Next Story
கதிர் தொகுப்பு
Trending News