"அகிலேஷ் யாதவ் குண்டர்களை வைத்து கள்ளதுப்பாக்கி தயாரித்தார்" - வெளுத்து வாங்கிய அமித்ஷா
By : Mohan Raj
உத்தரபரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மொகரம் பண்டிகைக்கு மக்களுக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு ராமநவமி, பரசுராமர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களில் மக்களுக்கு மின்சாரம் வினியோகம் வழங்காமல் இந்துக்களை வஞ்சித்து வந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் பள்ளியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, "சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேசத்துக்கு மின்சாரம் வராது அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது மொகரம் பண்டிகைக்கு மின்சாரம் வழங்கினார்கள் ஆனால் பரசுராமர் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களில் மக்கள் மின்சாரம் விநியோகம் செய்யாமல் அவதிப்பட வைத்தார்கள்" என்றார்.
மேலும் பேசிய அவர், "அகிலேஷ் கட்சியின் தொண்டர்கள் பந்தல்கண்ட்'டில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தயாரித்து வந்தனர், சமாஜ்வாடி கட்சி இளைஞர்களை குற்றத்தின் திசையை நோக்கி திருப்பி அவர்கள் வாழ்க்கையை மாற்றினார்கள். ஆனால் இன்று பந்தல்களில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள்ளார். அகிலேஷ் யாதவ் குண்டர்களை வளர்த்தார் ஆனால் நரேந்திர மோடி ஷேல் தயாரிப்பதற்காக பாதுகாப்புத்துறையை நிறுவியுள்ளார்" என்றார் அமித்ஷா.