மின்னல் வேகத்தில் நடைபெறும் கோரக்பூர் விரைவுச்சாலை பணிகள் - யோகியின் புதிய மைல்கல்
By : Mohan Raj
உத்திரபிரதேசத்தில் 93 கிலோ மீட்டர் அளவுள்ள இணைப்பு விரைவுச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள 9.35 கிலோ மீட்டர் நீளமுள்ள இணைப்பு விரைவுச்சாலை 34 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது, மீதமுள்ள கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த இணைப்பு சாலை கோரக்பூர் மாவட்டத்திலுள்ள ஜெய்ப்பூரில் தொடங்கி ஆசம்கர் மாவட்டத்திலுள்ள சலர்பூர் அருகிலுள்ள பூர்வாஞ்சல் வரை இணைவதன் மூலம் நிறைவடைகிறது.
இந்த விரைவு சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கின்றனர் மேலும் ஆறு வழி சாலை வரை மாற்றக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது, கோரக்பூர் அம்பேத்கர் நகர், சங்கர் நகர் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த சாலையின் திட்டச் செலவு 5875 கோடி ரூபாய்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு இதுபோன்ற வரலாற்றில் பேர் கூறும் சாலைகளை முன்னெடுத்து அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.