Kathir News
Begin typing your search above and press return to search.

"வார்டன் சகாயமேரியை கைது செய்தது தவறு" - மைக்கேல்பட்டியில் கிறிஸ்துவ பள்ளிக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்

வார்டன் சகாயமேரியை கைது செய்தது தவறு - மைக்கேல்பட்டியில் கிறிஸ்துவ பள்ளிக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Feb 2022 9:15 AM GMT

"வார்டன் சகாயமேரியை கைது செய்தது தவறு அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என மைக்கேல்பட்டியில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியுள்ளார்.


மதமாற்ற கொடுமையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதற்கு காரணமான அவர்களை கண்டுபிடித்து தர வேண்டுமென பா.ஜ.க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, அதன் விளைவாக சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ இதுவரை வார்டன் சகாயமேரியை காப்பாற்றவே சில அமைப்புகள் துடிக்கின்றன, அந்த வகையில் மைக்கேல் பட்டி கிராமத்தில் உள்ள சர்ச் வளாகத்தில் 'சமயசார்பின்மை மற்றும் சமூக நீதி பாதுகாப்பு கூட்டம்' என்ற பெயரில் திருமாவளவன் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடந்தது.


அதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் கூறியதாவது, "பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு எதிராக நாம் கூடி உள்ளோம், பி.ஜே.பி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியல், தமிழகத்தில் சாதி அரசியல் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன" என்றார்.


மேலும் பேசிய அவர், "தமிழக அரசும், காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது, சகாயமேரி கைது செய்தது தவறு அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கட்டாய மதமாற்றம் நிகழ்த்துவதாக அவதூறு பரப்புகின்றனர்" என்றார்.


சிறுமி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்து கொண்டிருக்கும் பொழுது 'தமிழக அரசும் காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்துவருகிறது சகாயமேரி கைது செய்தது தவறு' என குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குறித்து ஆதரவாக திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News