Kathir News
Begin typing your search above and press return to search.

"உலக அமைதிக்கு இந்தியாவின் கொள்கை பின்பற்றுங்கள்" - வேண்டுகோள் விடுக்கும் ராஜ்நாத்சிங்

உலக அமைதிக்கு இந்தியாவின் கொள்கை பின்பற்றுங்கள் - வேண்டுகோள் விடுக்கும் ராஜ்நாத்சிங்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Feb 2022 9:15 AM GMT

"உக்ரைனில் என்ன நடந்தாலும் இந்தியா அமைதியை விரும்புகிறது" என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனம் தற்போழுது உக்ரைன்-ரஷ்ய விவகாரத்தில்தான் இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவால் நான்காவது நாளாக உக்ரைனில் தாக்குதல் நடந்து வருகிறது, பரவலான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் போர் சூழலில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.


மேலும் இரு நாடுகளும் சமாதானமாக செல்ல வேண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது பற்றி கருத்து கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது, "உக்ரைனில் என்ன நடந்தாலும் அமைதி நிலவ வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்தியா எந்த நாட்டையும் தாக்கியதில்லை உலக அமைதிக்கு இந்த கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என பேசினார்.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News