Kathir News
Begin typing your search above and press return to search.

"டீசல் இல்லை ஆம்புலன்ஸ் வர முடியாது" அலட்சியமாய் பதில் சொன்ன ஊழியர்கள் - பலியான பழங்குடியின உயிர்

டீசல் இல்லை ஆம்புலன்ஸ் வர முடியாது அலட்சியமாய் பதில் சொன்ன ஊழியர்கள் - பலியான பழங்குடியின உயிர்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Feb 2022 9:30 AM GMT

108 ஆம்புலன்ஸல் டீசல் இல்லாத காரணத்தினால் உடனடியாக செல்ல முடியாமல் ஒரு உயிரை காப்பாற்ற வழியின்றி உயிரிழந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி. எல்லை மலை பகுதியை சேர்ந்தவர் 67 வயதான மாதன், பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் வழக்கம்போல் பணிக்கு கிளம்பும் பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர் ஆனால் நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் அங்கு வரவில்லை பின்னர் அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனம் ஒன்றை பிடித்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.


தனியார் வாகனம் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 'வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது உரிய நேரத்தில் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம், வாய்ப்புகள் இருந்திருக்கும்' எனக் கூறியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.


இந்த விவகாரம் குறித்து பேசிய மாதனின் உறவினர்கள் கூறும் பொழுது, "மயக்கத்தில் இருந்த உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றோம், ஆனால் ஆம்புலன்சில் டீசல் இல்லை எனவே உடனடியாக வரமுடியாது' என ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறிய காரணத்தினால் தனது வாகனத்தில் எடுத்து வந்தோம். ஆனால் முன்னரே வந்து இருந்தால் இவரை காப்பாற்றி இருக்கலாம் இப்படி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அநியாயமாக ஒரு உயிர் போய் விட்டது" என்றனர்.


மேலும் இது குறித்து கூடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News