Kathir News
Begin typing your search above and press return to search.

தலைமையை எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி தி.மு.க வேட்பாளர் வெற்றி! கன்னியாகுமரியில் நடந்த கூத்து!

தலைமையை எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி தி.மு.க வேட்பாளர் வெற்றி!  கன்னியாகுமரியில் நடந்த கூத்து!

DhivakarBy : Dhivakar

  |  4 March 2022 1:10 PM GMT

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகர் மன்ற தலைவருக்கான தேர்தலில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து, அதிருப்தி தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது பேசு பொருளாகியுள்ளது.


தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தாகிவிட்டது. வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகர் மன்றம் மற்றும் மாநகரங்களுக்கான தலைமைக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகமெங்கும் பல இடங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருக்கையில் பல இடங்களில் கட்சியினருக்கு இடையே சலசலப்பு நிலவியது.

இந்நிலையில் ஆச்சரியம் தரக்கூடிய வகையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர் மன்றத் தேர்தலில் தி.மு.க தலைமை அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து, அதிருப்தி தி.மு.க வேட்பாளரான முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன் ஆசைதம்பி வெற்றி பெற்றுள்ளார்.


இச்செய்தி அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.









Next Story
கதிர் தொகுப்பு
Trending News