Kathir News
Begin typing your search above and press return to search.

நீலகிரி கலைஞர்களுக்கு விருது: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாராம்!

நீலகிரி கலைஞர்களுக்கு விருது: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாராம்!

ThangaveluBy : Thangavelu

  |  8 March 2022 11:26 AM GMT

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கலைஞர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நரிசக்தி புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தார். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த #TodaEmbroidery மேம்பாடு வளர்ச்சியில் முக்கிய பங்களித்த கலைஞர்களான ஜெயமுத்து மற்றும் தேஜம்மாவிற்கு நரிசக்தி புரஸ்கார் விருது வழங்கியது தமிழகத்திற்கு பெருமை அளிக்கிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதே போன்று மற்றொன்று ட்விட்டர் பதிவில்; மனநலக் கோளாறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்காக தமிழகத்தில் இலவச மொபைல் டெலி& மனநல மதிப்பீடு சேவையை உருவாக்கிய திருமதி.தாரா ரங்கசாமி அவர்கள் நரிசக்தி புராஸ்கர் விருது பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News