பாலியல் புகாரில் சிக்கிய சுப.வீரபாண்டியன் தமிழ்நாடு அரசு பாடநூல் கழக உறுப்பினரா? அதிகரிக்கும் சலசலப்புகள்
By : Mohan Raj
தொடர் பாலியல் புகாரில் சிக்கும் சுப.வீரபாண்டியன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருப்பது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக சமீபமாக 'பிரான்ஸ் தமிழச்சி' என்னும் பெண், பெரியார் இயக்கங்கள் மற்றும் அதன் சார்பு இயக்கங்கள் மீது பாலியல் சுரண்டல் புகாரை தெரிவித்து இருந்தார். லூலூ என்கின்ற பெண் குழுவில் இருந்து பெண்களை வசியப்படுத்தி பாலியல் சுரண்டல் ஈடுபடுத்தி அதன் மூலம் மிரட்டி பணம் பறிப்பதையும், வீடியோ எடுத்து மிரட்டியும் அம்பலப்படுத்தி வருவதையும் கூறிய தமிழச்சி அந்த புகாரில் சுப.வீரபாண்டியனின் பெயரையும் சேர்த்துள்ளார்.
இந்தப் பாலியல் புகாரில் சுப.வீரபண்டியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இடங்களிலும் பல விதங்களிலும் ஈடுபட்டுள்ளார் என பகிரங்கமாக கூறும் பிரான்சிஸ் தமிழச்சியின் புகாருக்கு இதுவரை சுப.வீரபாண்டியன் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ஆனால் சுப.வீரபாண்டியனோ தற்பொழுது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். பிரான்சிஸ் தமிழச்சியின் பாலியல் புகாரில் பலவிதமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர் பள்ளி கல்வி பயிலும் மாணவர்களின் பாடநூல் கழகத்தின் உறுப்பினராக இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.