Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்ணியம் பேசிக்கொண்டே பாலியல் சுரண்டலில் கருஞ்சட்டையினர் - பிரான்சிஸ் தமிழச்சி'யின் வாக்குமூலம்

பெண்ணியம் பேசிக்கொண்டே பாலியல் சுரண்டலில் கருஞ்சட்டையினர் -  பிரான்சிஸ் தமிழச்சியின் வாக்குமூலம்

Mohan RajBy : Mohan Raj

  |  9 March 2022 11:30 AM GMT

பெரியாரிஸ்ட் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட யூமா ஜஹாரோ என்ற பெண் 'பெரியார்' என்னும் பெயரைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய பாலியல் சுரண்டல் நடந்துள்ளதாக வெடிகுண்டு குற்றச்சாட்டை வீசியுள்ளார் பெரியாரிய கும்பல் மீது.


பிரான்சில் இருந்து வந்த தமிழச்சி எனப்படும் பெண் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார், அப்போது, "அவர் பெரியார் மற்றும் திராவிட இயக்க குழுக்களால் பெரும்பாலான பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த பெண்களை ஒருங்கிணைப்பது லூலூ என்கின்ற பெண் குழு" என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார்.


தமிழச்சி கூறியபடி, "பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ்கின்றனர். அவர்களிடம், "நீங்கள் உறவில் திருப்தியாக இருக்கிறீர்களா? உங்கள் கணவருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது? என்பது போன்ற பாலியல் உணர்வை தூண்டும் கேள்விகளைக் கேட்டு அவர்களிடம் உங்கள் உறவில் திருப்தியாக இல்லை என்றால் அதற்கு நீங்கள் வெளியில் தேடிக் கொள்ளலாம்! என்ற ரீதியில் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் பெரியார் கும்பலால் சீரழிக்கப்படுகிறார்கள்" என்ற உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.


மேலும் இந்தக் கும்பலில் சுந்தரவல்லி, கொளத்தூர் மணி, பெரியார் சரவணன், ஆகிய திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் அதிகமாக இடம்பறுகின்றது.


லூலூ கும்பல் என்றால் தேவா ஜம்லா என்ற கன்னியாகுமரியை சேர்ந்த பெண் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் அவர் 2017'ம் ஆண்டு பேஸ்புக்கில் 180 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை துவங்கினார், அவர் அதற்கு முன் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு எழுத்தாளராக தன்னை காட்டிக் கொண்டு பெண்களை ஒருங்கிணைக்க தொடங்கிய லூலூ நாளடைவில் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு தள்ளும் வேலையைச் செய்து வந்ததாக தெரிவிக்கிறார் பிரான்ஸ் தமிழச்சி.


மேலும் தமிழச்சி கூறுவதாவது, "லூலூ பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பெரியார் இயக்கங்களைச் சேர்ந்த பல கருப்பு சட்டை அணிந்த தலைவர்களும், பிரமுகர்களுக்கும் லூலூ குழுவிலுள்ள பெண்களை ஆபாசமாக பேச வைப்பது, வீடியோ சாட்டிங் தொடர்பை ஏற்படுத்துவது, கும்பலாக உடலுறவில் ஈடுபடுவது போன்ற செயல்களை ஏற்பாடு செய்வது, இதுபோன்ற விவகாரங்களில் குடும்ப பெண்களை ஈடுபடுத்தி அவர்களை பாலியல் சுரண்டல் செய்வதாக தெரிவித்துள்ளார்.


மேலும் பிரான்சிஸ் தமிழச்சி கூறியதாவது, "பெரியார் சரவணன் என்ற நபர் பல பெண்களை இது போல் ஏமாற்றி உள்ளதாகவும் அவரிடம் தானும் வீடியோ காலில் பேசி அவர் பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 'என்னிடம் வீடியோ காலில் பேசும் பொழுது தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை காண்பிக்கச் சொல்லி பெரியார் சரவணன் கூறினார்' என்பது போலவும் பேட்டியில் கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறும் நபர்களாவது, கொளத்தூர் மணி, சுந்தரவள்ளி, சுப. வீரபாண்டியன், ஓவியா இது போன்றவர்கள் மீதான பாலியல் புகார்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாகவும் ஆளும் தி.மு.க கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார் பிரான்சிஸ் தமிழச்சி.


ஆளும் திமுக அரசு இந்த பாலியல் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமா?



Source - The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News