Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்துவோ, முஸ்லிமோ எங்கள் ஆட்சி அனைவருக்குமானது" உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா

இந்துவோ, முஸ்லிமோ எங்கள் ஆட்சி அனைவருக்குமானது உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா

Mohan RajBy : Mohan Raj

  |  10 March 2022 9:45 AM GMT

"இந்துவோ, முஸ்லிமோ எங்கள் ஆட்சி அனைவருக்குமானது" என உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதுவரையிலான முடிவுகளில் 250'க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி யோகி அரசு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது மாநிலத்தில், இந்த நிலையில் உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.


அப்போது அவர் கூறியதாவது, "நாங்கள் உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றுவோம், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் உத்தரப் பிரதேசத்தை மாஃபியா இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளது. எங்கள் திட்டங்கள் அனைவருக்குமானது நாங்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் என யாரையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை நாங்கள் அனைவருக்கும் சேர்த்து உழைத்தோம். மோடி மற்றும் யோகி தலைமையிலான அரசாங்கம் அனைவருக்கும் நன்மையே செய்கிறது, யோகி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளார்" என கூறியுள்ளார்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News