Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் கடவுள் முருகனை அவமதித்த 'எதற்கும் துணிந்தவன்' படப்பாடல் - போலீசில் அதிரடி புகார்

தமிழ் கடவுள் முருகனை அவமதித்த  எதற்கும் துணிந்தவன் படப்பாடல் - போலீசில் அதிரடி புகார்

Mohan RajBy : Mohan Raj

  |  11 March 2022 2:25 PM GMT

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.





இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்' இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.





இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முருகன் பாடல்' தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்துவது போன்று இருப்பதாகவும் எனவே இப்படத்தில் இருந்து நீக்க கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். குறித்து அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறியதாவது, "பாடல் வெளியாகி நாட்கள் ஆகிவிட்ட போதும் இன்றுதான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது, அதனால் பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும். படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோரும், பாடலை முருகன் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்" என்றார். இவ்வழக்கு இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளும் இழிவுபடுத்துவதற்கு ஒரு பாடமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News