Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகல்!

காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகல்!

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2022 12:40 PM GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் சி.எம்.இப்ராஹிம் என்பவரும் ஆவார். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்விய¬ சந்தித்தது. இதனால் பலரும் அக்கட்சியை விட்டு விலகுவதற்கு முடிவு எடுத்துள்ளனர்.

அதில் முதலாவதாக இப்ராஹிம் என்பவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 12 ஆண்டுகளாக எத்தனையோ கடிதங்களை எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு பிரச்சனைகளுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News