Kathir News
Begin typing your search above and press return to search.

நந்தகோபாலசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா: மத்திய அமைச்சர், ஆளுநர், தமிழக பா.ஜ.க. தலைவர் பங்கேற்பு!

நந்தகோபாலசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா: மத்திய அமைச்சர், ஆளுநர், தமிழக பா.ஜ.க. தலைவர் பங்கேற்பு!

ThangaveluBy : Thangavelu

  |  14 March 2022 12:23 PM GMT

நாமக்கல் மாவட்டம், கே.புதுப்பாளையத்தில் ஸ்ரீ பாமாருக்மிணி சமேத ஸ்ரீ நந்தகோபாலசுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; நாமக்கல் கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாமாருக்மிணி சமேத ஸ்ரீ நந்தகோபாலசுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பாக்கியத்தை பேறு பெற்றேன். மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களின் குலதெய்வமான இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தில் மேதகு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, ஆகியோருடன் கலந்து கொண்டு ஆண்டனின் பேரருள் பெற்றோம்.


மேலும், மாண்புமிகு புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பல மாவட்ட தலைவர்கள் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழும், தமிழரும் தமிழ் நாடும் செழிக்க வேண்டினேன்! இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News