Kathir News
Begin typing your search above and press return to search.

"கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" - காங்கிரஸ் பற்றி அமெரிக்கை நாராயணன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை - காங்கிரஸ் பற்றி  அமெரிக்கை நாராயணன்

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2022 12:30 PM GMT

தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட கதையாகி விடக் கூடாது' என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அமெரிக்கை நாராயணன்.


5 மாநில தேர்தலில் படுதோல்வி அடந்த காங்கிரஸ் கட்சியை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான அமெரிக்கை நாராயணன் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளதாவது, "நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விமர்சிக்கவில்லை காங்கிரஸ் கட்சிக்காக தான் விமர்சிக்கிறேன்! மோடி குறித்து விமர்சிப்பவர்களை இந்த நாட்டுக்கு எதிரானவன் என மோடி பக்தர்கள் சொல்லி வருவதை போல் எப்படி ஏற்க முடியாதோ அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து ஆக்கப்பூர்வமான முறையில் நான் விமர்சித்து வருவதை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனமாகவும் கருதமுடியாது" என்றார்.


தொண்டர்களின் ரத்தத்தில் கட்சியை வளர்ப்பவர்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ரத்தத்தை கொடுத்து வளர்க்கப்பட்ட கட்சி அந்தவகையில் சோனியா, ராகுல், பிரியங்கா எல்லாருமே நல்லவர்கள் தான் ஆனால் வல்லவர்கள் இல்லை அதைத்தான் நான் விமர்சிக்கிறேன்" என்றார்.


"ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் நான் 2014 லயே காங்கிரஸ் கட்சி மீது வைத்து இருந்தால் என்னை போல முட்டாள் யாரும் கிடையாது ஆனால் கட்சியின் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட' இந்த 2022-ல் கூட அவசியமான இந்த விமர்சனங்களை நான் வைக்காவிட்டால் என்னை போல துரோகி யாரும் கிடையாது" எனவும் கூறினார்.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News