Kathir News
Begin typing your search above and press return to search.

'உலக தண்ணீர் தினம்' பிரதமர் மோடி கூறியது என்ன?

உலக தண்ணீர் தினம் பிரதமர் மோடி கூறியது என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  22 March 2022 11:45 AM GMT

"நம் குடிமக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஜல் ஜீவன் மிஷன் போன்ற பல நடவடிக்கைகளை நம்தேசம் மேற்கொண்டு வருகிறது" என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. புவி வெப்பமாதல், மழை அளவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம்' என பிரதமர் மோடி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "உலக தண்ணீர் தளத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதற்கான உறுதி மொழியை நாம் மீண்டும் உறுதி செய்வோம், நம் குடிமக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஜல் ஜீவன் மிஷன் போன்ற பல நடவடிக்கைகளை நம் தேசம் மேற்கொண்டு வருகிறது.


கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முறையான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் நீர் சேமிப்பு பெரிய அளவில் எடுத்துச்செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது, தண்ணீரை சேமிக்க பாடப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நான் பாராட்ட விரும்புகிறேன்" என பிரதமர் மோடி கூறினார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News