Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி முன்னிலையில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடி முன்னிலையில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத்

Mohan RajBy : Mohan Raj

  |  25 March 2022 1:45 PM GMT

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.


உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடித்தது முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் வெற்றி பெற்றார். இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட விழாவில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். மேலும் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றனர்.


இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியொர் கலந்து கொண்டனர்.


பதவியேற்பு விழா அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா அரங்கத்தில் 50 ஆயிரம் பேர் முன்னிலையில் நடைபெற்றது. நடந்து முடிந்த உத்திரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க 273 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News