Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய தி.மு.க., காங்கிரஸ், கவுன்சிலர் மிரட்டல்: அபகரிக்க விட மாட்டோம் என தர்ணாவில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்!

ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்ய தி.மு.க., காங்கிரஸ், கவுன்சிலர் மிரட்டல்: அபகரிக்க விட மாட்டோம் என தர்ணாவில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2022 7:09 AM GMT

தாராபுரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆட்டோ நிறுத்தத்தை உடனடியாக காலி செய்யும்படி திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. அங்கு 70க்கும் மேற்பட்டோர்கள் தங்களின் வாழ்வதாரத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். தற்போது புதியதாக வெற்றிபெற்ற திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்களுக்கு இடம் தேவை எனவே உடனடியாக ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்யும்படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு முழுவதும் தாராபுரம் ஆட்டோ நிறுத்தத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, கடந்த 40 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகின்றோம். கொரோனா தொற்றால் நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த நிலையில் தற்போதுதான் எங்களின் தொழில் சற்று முன்னேறி வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆட்டோ நிறுத்தத்தை காலி செய்யும்படி மிரட்டல் விடுப்பது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: News J

Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News