Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி அடிக்கடி செல்லும் கோவிலுக்குள் 'அல்லாஹு அக்பர்' என கத்திகொண்டே ஆயுதத்துடன் உள்ளே நுழைந்த 'மர்ம நபர்'

யோகி அடிக்கடி செல்லும் கோவிலுக்குள் அல்லாஹு அக்பர் என கத்திகொண்டே ஆயுதத்துடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2022 8:00 AM GMT

உத்தரப்பிரதேசத்தில் 'அல்லாஹு அக்பர்' என்று கூச்சலிட்டு கோரக்நாத் கோயிலுக்குள் நுழைய முயன்ற நபர், கூரிய ஆயுதத்தால் இரு காவலர்களை காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்நாத் கோவில் வளாகத்திற்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றார். கூரிய முனைகள் கொண்ட ஆயுதம் ஏந்திய அவர், தடுக்க முயன்ற இரு காவலர்களை காயப்படுத்தினார். அஹ்மத் முர்தாசா அப்பாஸி என அடையாளம் காணப்பட்ட தாக்குதலாளி, கோவிலில் பாதுகாப்புப் பணியாளர்களை பின்னுக்கு தள்ளி அவர்களுடன் மல்லுக்கு நின்றார். இந்த சம்பவம் நடந்த கோவிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோவிலின் தலைமை பூசாரி (மஹந்த்) என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கோவில் வளாகத்தில் அவரது தனிப்பட்ட தங்குமிடம் உள்ளது. தாக்குதல் நடந்த போது நல்லவிதமாக ​​முதல்வர் யோகி கோவிலில் இல்லை.

கோரக்நாத் கோவிலில் நேரில் கண்ட சாட்சிகளின்படி, அப்பாஸி திடீரென கோவில் வளாகத்திற்குள் நுழைய விரும்பினார். கோவிலின் பிரதான வாயில் கோரக்நாத் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ளது. கான்ஸ்டபிள் கோபால் கவுட் மற்றும் அனில் பாஸ்வான் ஆகியோர் பாதுகாப்புக்காக பிரதான வாயிலில் நிறுத்தப்பட்டனர். இரவு 7:15 மணியளவில் அந்த நபர் வளாகத்திற்குள் நுழைய முயன்றார் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. போலீஸ் அதிகாரிகள் அவரை சோதனைக்காக தடுத்தபோது, ​​அப்பாஸி போலீசாரின் ஆயுதங்களைப் பறிக்க முயன்றார். அப்போது நடந்த தள்ளுமுள்ளு கலவரத்தில் அப்பாஸி கூரிய ஆயுதத்தை எடுத்து, போலீசாரை தாக்கினார்.


என்ன நடந்தது என்பதை போலீசார் புரிந்து கொள்வதற்குள், அப்பாசி அவர்களை பலத்த காயப்படுத்தினார். அதன்பிறகு, 'அல்லாஹ்-ஹு-அக்பர்' என்று கத்திக் கொண்டே கோயிலின் பிரதான வாயிலை நெருங்கினார். கான்ஸ்டபிள் அனுராக் ராஜ்புத் மற்றும் ஏ.ஐ.யு அதிகாரி அனில் ஆகியோர் அவரைத் தடுத்தனர். அவர்களையும் அப்பாஸி காயப்படுத்த முயன்றார். கான்ஸ்டபிள் ராஜ்புத் மற்றும் ஏ.ஐ.யு.அனில் அவரைத் தாக்கியபோது அவர் கிட்டத்தட்ட அப்பாஸி கோவில் வாசலை நெருங்கிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், கோவில் வளாகத்திற்கு விரைந்து வந்து அப்பாஸியை சரமாரியாக தாக்கினர். அப்பாஸி தனியாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அப்பாஸிக்கு அடிபணிந்த போது தப்பியோடிய மற்றொருவர் இருந்தார். அவர் ஒரு பையை விட்டுச் சென்றார், அதில் ஒரு லேப்டாப், பென் டிரைவ், விமான டிக்கெட் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.


காவல் துணைக் கண்காணிப்பாளர் (கோரக்பூர் ரேஞ்ச்) ஜே ரவீந்தர் கவுட், மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா ஆகியோர் கோயில் வளாகத்துக்குச் சென்று சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்பாஸி பிடிபட்டதும், 'யாரோ என்னைச் சுடுகிறார்கள்' என்று கத்துவது கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிலுக்கு முதல்வர் யோகி அடிக்கடி சென்று வருவதால், இந்த சம்பவம் அதி முக்கியமானது என்று மண்டல ஏ.டி.ஜி அகில் குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலில் கெமிக்கல் இன்ஜினியரான அப்பாசி, குடும்பப் பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருப்பதாக விசாரணையின் போது கூறியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, அவர் ஐ.ஐ.டி பாம்பேயில் இரசாயன பொறியாளராக உள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News