Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க'வின் பொதுக்கூட்டத்திற்காக திருடப்பட்ட அரசாங்கத்தின் மின்சாரம்!

தி.மு.கவின் பொதுக்கூட்டத்திற்காக திருடப்பட்ட அரசாங்கத்தின் மின்சாரம்!

DhivakarBy : Dhivakar

  |  12 April 2022 5:56 AM GMT

கிருஷ்ணகிரி : தி.மு.க'வின் பொது கூட்டத்திற்காக அரசின் மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதேபோல் தி.மு.க'வினரின் அராஜக போக்கும் மேலோங்கி வருகிறது. இதனால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தி.மு.க அரசின் மீது மக்கள் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்.


இதன் வரிசையில், ஓசூர் ராம்நகரில், தி.மு.க மாவட்ட கழக செயலாளர் மற்றும் ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ் தலைமையில், தி.மு.க'வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையை விலக்கி மேடையில் உரையாற்றி கொண்டிருந்தனர்.


இந்நிலையில், அக்கூட்டம் நடைபெறத் தேவையான மின்சாரத்தை அருகில் இருந்த மின்சாரக் கம்பியில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை தி.மு.க'வினர் திருடியுள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News