Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மதத்தை ஏற்க விரும்பும் அசாதுதீன் ஓவைசி கட்சியின் முன்னாள் தலைவர் - யோகி ஆதித்தியநாத்திடம் தஞ்சம்

இந்து மதத்தை ஏற்க விரும்பும் அசாதுதீன் ஓவைசி கட்சியின் முன்னாள் தலைவர் - யோகி ஆதித்தியநாத்திடம் தஞ்சம்

Mohan RajBy : Mohan Raj

  |  16 April 2022 10:30 AM GMT

அசாதுதீன் ஓவைசியின் கட்சியை சார்ந்த முன்னாள் தலைவரும், அவரது மனைவியும் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதத்தை ஏற்க விரும்புவதாகவும் அதற்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உதவியை நாடவும் விரும்புகிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு துன்புறுத்தல், வரதட்சணை கொடுமைகள் நடைபெற்ற நிலையில் அது குறித்து முஸ்லீம் சமூக தலைவர்களிடம் உதவி கோரியதில் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என கூறியுள்ளனர்.

அசாதுதீன் ஓவைசியின் AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) இன் முன்னாள் மாவட்டத் தலைவர் முகமது ருவேத் சபீர் மற்றும் அவரது மனைவி சமினா பர்வீன் ஆகியோர் இந்து மதத்திற்கு மாற விருப்பம் தெரிவித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அணுகி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரியுள்ளனர். . தங்கள் சொந்த இஸ்லாம் சமூகத்தின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக முகமது ருவேத் தம்பதியினர் தெரிவித்தனர்.



மேலும், இது தொடர்பாக மொரதாபாத் காவல்துறையில் முறையான புகார் ஒன்றையும் தம்பதியினர் அளித்துள்ளனர். அந்த புகாரில், தம்பதியினர் தங்களுக்கு விருப்பமான இந்து மதத்திற்கு மாற இஸ்லாம் சமூகத்தினர் தடையாக இருக்கிறார்கள் எனவும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக கூறும் அவர்கள் இந்து மதத்திற்கு மாற செயல்முறையைத் தொடங்குவதற்கு தங்கள் இஸ்லாம் மதத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி ட்விட்டரில் வெளியான வீடியோ ஒன்றில், முன்னாள் AIMIM தலைவரின் மனைவி சமீனா பர்வீன், தனது இஸ்லாமிய சொந்தக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு உதவ தனது சமூகத்தைச் சேர்ந்த யாரும் முன்வராததால், தாங்கள் இந்து மதத்திற்கு மாற விரும்புவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியவர்கள். நீதிக்காக பல செல்வாக்கு மிக்க முஸ்லீம் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் கதவுகளைத் தட்டியதாக அவர் கூறினார், ஆனால் அவர் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டார்கள் எனவும் வேறு வழியின்றி, தன்னிச்சையாக மதமாற்றம் செய்வதற்கான சரியான செயல்பாட்டில் உதவி கேட்க முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை அணுகினார்.

மேற்கூறிய வீடியோவில், சமீனா பர்வீன், AIMIM முன்னாள் தலைவரான முகமது ருவேத் சபீரை திருமணம் செய்ததில் இருந்து, அவரது குடும்பத்தினர் தன்னையும், தன் பெற்றோரையும் வரதட்சணைக்காக துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்திற்கு முன், சபீரின் பெற்றோர், குடும்பத்தின் ஒரே மகன் எனக் கூறி, தனது தந்தையிடம் பெரும் தொகையை கேட்டதாக அவர் கூறினார். திருமணத்துக்குப் பிறகும் வரதட்சணைக் கோரிக்கை தொடர்ந்தது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீனா மேலும் கூறுகையில், தனது தந்தைக்கு பணம் இல்லாமல் போனதால், அவரது மாமியார் அவர்களை மிரட்டத் தொடங்கினர் மற்றும் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தனர். மாமியார் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அவர் தனது நகைகளை விற்றார். இருப்பினும், ஒரு கட்டத்தில் அவளிடம் பணம் இல்லாததால், அவர்கள் அவளைத் துன்புறுத்தத் தொடங்கினர். அனைத்து முஸ்லீம் தலைவர்கள் மற்றும் அமைப்புகளை அணுகியதாக சமீனா புலம்பினார், ஆனால், தனது மாமியார்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் தொடர்புகளுக்கு பயந்து, அனைவரும் பின்வாங்கினர். யாராவது உதவி செய்யத் தேர்ந்தெடுத்தாலும், அவரது மாமியார் அவர்களை பொய் வழக்குகள் போட்டு மிரட்டுகிறார்கள் என்று சமீனா கூறினார்.

நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு உதவாத சமூகத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் அர்த்தமில்லை என்று கூறிய சமீனா, "எங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாரும் எங்களுக்கு உதவவில்லை. மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்து மதத்தை ஏற்று வாழ்கை நடத்துவோம்" என கூறியுள்ளார்.

இதற்கிடையில், AIMIM முன்னாள் தலைவரும், சமினா பர்வீனின் கணவருமான முகமட் ருவேத் சபீரும், யோகி ஆதித்யநாத் அவர்கள் இந்து மதத்திற்கு மாறுவதற்கு உதவுவார் என்று தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாக வீடியோவில் கூறுவது கேட்கப்படுகிறது. அவர்கள் போராடும் மக்கள் அனைவரும் சமாஜ்வாடி கட்சியின் குண்டர்கள் என்றும் அவர் கூறினார். "முகமது பர்வேசும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்தான். எனது தந்தையும் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர் மற்றும் கட்சியின் சித்தாந்தங்களை கடைபிடிப்பவர், அதனால்தான் அவர் எங்களை இந்த அளவிற்கு சித்திரவதை செய்து துன்புறுத்துகிறார், "என்று AIMIM முன்னாள் தலைவர் கூறினார்.

AIMIM முன்னாள் தலைவர் மற்றும் மனைவி இந்து மதத்தை ஏற்க விரும்பும் வீடியோவை அடுத்து மொரதாபாத் காவல்துறையின் அறிக்கை வைரலாகி வருகிறது.

Source - Opindia.com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News