Kathir News
Begin typing your search above and press return to search.

ஜஹாங்கிர்புரி ஹனுமான் ஜெயந்தி கலவரம் - பின்னணி என்ன? என் வன்முறையாக மாறியது?

ஜஹாங்கிர்புரி ஹனுமான் ஜெயந்தி கலவரம் - பின்னணி என்ன? என் வன்முறையாக மாறியது?

Mohan RajBy : Mohan Raj

  |  17 April 2022 12:15 PM GMT

டெல்லி ஜஹாங்கிர்புரியின் சி பிளாக் வழியாக ஹனுமான் ஜெயந்தி யாத்திரை சென்றபோது கல் வீச்சு மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டு கலவரம் ஏற்பட்டது தொடர்பாக டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு டி.சி.பி உஷா ரங்னானி தெரிவித்துள்ளார்.

காவல்துறை முதல் தகவல் அறிக்கையின்படி, ஹனுமான் ஜெயந்தி ஊர்வலம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், ஊர்வலம் சி பிளாக்கில் உள்ள ஜமா மஸ்ஜித் அருகே மாலை 6 மணியளவில் வந்தபோது, ​​​​அன்சார் என்ற நபர் தனது சில தோழர்களுடன் ஊர்வலத்தை அருகில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தை தொடர்ந்து பின்னர் தகராறு ஏற்பட்டது, இந்த தகராறு விரைவில் கல் வீச்சாக மாறியது, இதன் விளைவாக ஊர்வலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையின்படி, போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர், ஆனால் கும்பலின் ஒரு குறிப்பிட்ட பிரிவு காவல்துறை உத்தரவுகளை மதிக்காமல், கலவரம் ஏற்படுத்தும் கோஷங்களைத் தீவிரப்படுத்தியது மற்றும் சில வாகனங்களுக்கு தீ வைத்தது. ஊர்வலத்தின் மீது மக்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசினர்.

மேலும் கலவர கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இதில் சப் இன்ஸ்பெக்டர் மேதா லால் மீனா கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார், சில சமூகவிரோதிகள் ஊர்வலத்தை இடைமறித்து கலவரம் ஏற்படுத்தும் வரை ஹனுமான் ஜெயந்தி முழு நிகழ்ச்சியும் அமைதியாக இருந்ததாக முக்கிய தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ராஜீவ் ரஞ்சன் சுட்டிக்காட்டினார். 147 (கலவரம்), 148 (ஆயுதக் கலவரம்), 186 (அரசு ஊழியரின் பணியைத் தடுத்தல்), 353 (அரசு ஊழியர் மீது தாக்குதல்), 307 (கொலை செய்ய முயற்சி), 427 (சொத்து சேதம்) மற்றும் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதச் சட்டம் 1959 இன் பிரிவு 27 உடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் 436 (வெடிபொருட்களால் தாக்குதல்) போன்றவற்றின் கீழ் வழக்கு பதிந்துள்ளது காவல்துறை.

இந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன, அதில் ஒரு கலவர கும்பல் 'அல்லாஹு அக்பர்' என்ற கோஷங்களுடன் வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களை வைத்துக்கொண்டு இருப்பதை வீடியோவில் காணலாம்.

சனிக்கிழமையன்று நடந்த வகுப்புவாத மோதல்களில் எட்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நபர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கலவரக்காரர்கள் சுட்ட தோட்டாவால் தாக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை டி.சி.பி தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களை அடையாளம் காண அதிகாரிகள் சி.சி.டி.வி வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக கிளிப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வைக் கவனத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி போலீஸ் கமிஷனருடன் பேசி, பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி உத்தரவிட்டார். எதிர்பாராத நிகழ்வுகளைத் தடுக்க, ஜஹாங்கிர்புரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வடமேற்கு தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி'யான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், சனிக்கிழமை இரவு ஜஹாங்கிர்புரிக்கு விஜயம் செய்தார். அவர், "என்னால் தூங்க முடியவில்லை; நானே சென்று நிலைமையைச் சரிபார்க்க விரும்பினேன். மத்திய உள்துறை அமைச்சரும் விழித்திருக்கிறார், ஒவ்வொரு நிமிடத்தையும் கண்காணிக்கிறார்" என கூறினார். டெல்லியில், குறிப்பாக சி பிளாக் மற்றும் எச்2 பகுதியில் சட்டவிரோதமாக வங்காளதேசத்திலிருந்து குடியேறியவர்களின் மையமாக ஜஹாங்கிர்புரி இருப்பதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஜஹாங்கிர்புரியின் B தொகுதியும் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய மக்களைக் கொண்டுள்ளது. சி பிளாக்கில் உள்ள மங்கள் பஜார் மற்றும் குஷால் திரையரங்கம் இடையே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அதிகாரிகளின் கூறியபடி, ஜஹாங்கிர்புரி சம்பவத்தின் வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா கேட்டுக் கொண்டார்.


Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News