Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கைது செய் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார்

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கைது செய் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார்

ThangaveluBy : Thangavelu

  |  18 April 2022 12:12 PM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவால் ஆபத்து உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இது பற்றிய தகவல் மீடியாக்களில் வெளியானதில் இருந்து தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு காரணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை மத்திய அரசு தடை செய்யப்போகிறது என்ற தகவல் ஒருபுறம் கசியத்துவங்கியுள்ளது. அதாவது இந்த இயக்கத்தால் இந்தியாவுக்கு ஆபத்து இருக்கிறது என்று மத்திய உளவுத்துறையால் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது என்ற தகவலும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த இயக்கம் தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News