Kathir News
Begin typing your search above and press return to search.

'ஒலிப்பெருக்கிகளின் சத்தம் வளாகத்தை விட்டு வெளியே வரக்கூடாது' - யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

ஒலிப்பெருக்கிகளின் சத்தம் வளாகத்தை விட்டு வெளியே வரக்கூடாது - யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

Mohan RajBy : Mohan Raj

  |  19 April 2022 2:00 PM GMT

இந்துக்களுக்கு எதிரான இஸ்லாமிய வன்முறைகள் இந்தியாவின் பல பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைத்த சில நாட்களுக்குப் பிறகு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் மத ஊர்வலங்களின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். ஈத் மற்றும் அட்சய திருதியையை முன்னிட்டு, உத்தரபிரதேச முதல்வர், அனுமதியின்றி எந்த மத ஊர்வலத்தையும் நடத்தக்கூடாது என்றும், ஒலிபெருக்கிகளை உபயோகிப்பது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

திங்கள்கிழமை நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, ​​ஒவ்வொரு மதத்தினரும் கடவுளை வழிபடும் மத முறையை பின்பற்ற சுதந்திரம் உள்ளதாகவும், ஆனால் அதிக சப்தங்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சம்மந்தப்பட்ட மதகுருமார்கள் உறுதி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மசூதிகள் பிரார்த்தனைக்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்த யோகி, மைக்குகளைப் பயன்படுத்தலாம், ஆனால் ஒலி வளாகத்திலிருந்து வெளியே வரக்கூடாது என்று கூறினார். "மற்றவர்கள் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடாது", என்று அவர் புதிய தளங்களில் ஒலிபெருக்கிகளை நிறுவ அனுமதி மறுத்தார்.

மத ஊர்வலங்கள் குறித்து, அனுமதியின்றி எந்த மத ஊர்வலமும் நடத்தப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். ஊர்வலத்தின் போது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு ஏற்பாட்டாளர்கள் உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். இதேவேளை, பாரம்பரிய மத ஊர்வலங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். "புதிய திட்டங்களுக்கு தேவையற்ற அனுமதி வழங்கப்படக்கூடாது" என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளை 24 மணி நேரமும் பணியில் இருக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் கேட்டுக் கொண்டார். மே 4ம் தேதி வரை அனைத்து போலீஸ் அதிகாரிகளின் விடுமுறையையும் ரத்து செய்து, விடுப்பில் உள்ளவர்களை 24 மணி நேரத்தில் பணியில் சேர உத்தரவிட்டார். மேலும், பதற்றமான பகுதிகளில் ஆளில்லா விமானங்களை அனுப்பவும், ஒவ்வொரு தருணத்தையும் கண்காணிக்கவும் நிர்வாக அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ராம நவமி ஊர்வலம் மற்றும் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது, ​​ஈத் மற்றும் அட்சய திருதியையை முன்னிட்டு உ.பி காவல்துறையினரிடம் கால் ரோந்து பணியை மேற்கொள்ளவும், காவல்துறை பதில் வாகனத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "ஒவ்வொரு திருவிழாவும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் நடைபெற, உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.



Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News