Kathir News
Begin typing your search above and press return to search.

'ஆழ்வார்கள், நாயன்மார்கள் மண்ணிற்கு வரவேற்கிறோம்' - உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை

ஆழ்வார்கள், நாயன்மார்கள் மண்ணிற்கு வரவேற்கிறோம் - உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை

DhivakarBy : Dhivakar

  |  24 April 2022 8:08 AM GMT

சென்னை: புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தார் அமித் ஷா. அவருக்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமான நிலையம் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அமித்ஷாவுக்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன் திருக்குறளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, அண்ணாமலையும் குஜராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் மற்றும் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியத்தையும் அமித்ஷாவுக்கு வழங்கினார்.


இதுகுறித்து அண்ணாமலை தன் டுவிட்டர் பதிவில்: ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நம் தமிழ் மண்ணிற்கு வருகை தந்த மாண்புமிகு திரு அமித்ஷா அவர்களை இன்று அன்புடன் வரவேற்றோம். நம் திருக்குறளையும் (குஜராத்தியில்),தமிழ் இலக்கிய மறை பழமையான(2300 ஆண்டுகள்) தொல்காப்பியத்தை (இந்தியிலும்) அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News