'தீக்குளிச்சாதான் உங்க ஆட்சியில் நீதியா?' விருதுநகர் சம்பவத்தில் பா.ஜ.க போராட்டத்தில் இறங்கும் எச்சரித்த அண்ணாமலை
By : Mohan Raj
தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க பேரூராட்சி தலைவர் மகனின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் ஒருவர் பெட்ரோல் வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட இருக்கன்குடி கிழக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜா. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தேங்காய் பழக்கடை நடத்தி வருகிறார் இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 17 வயது மகள் சின்னையாபுரத்தில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் மனைவி தனது 17 வயது மகளுக்கு இருக்கன்குடி தி.மு.க'வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் செந்தாமரை அவரின் மகன் சுலைமான் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதை தட்டிக் கேட்பதற்கு தன்னை மானபங்கப்படுத்தி அரைநிர்வாணமாக அவமானப்படுத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இருக்கன்குடி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
அவர் புகாரின் பேரில் தி.மு.க பேரூராட்சி தலைவர் செந்தாமரை அவருடைய மகன் சக்திமான், சுலைமான், ஜமான் உள்ளிட்ட 8 பேர் மீது இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், ஆனால் யாரையும் கைது செய்யவில்லை இந்நிலையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் கைது செய்யாமல் விட்டு விட்டனர் எனக் கூறி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மனு அளித்த பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தற்கொலைக்கு முயன்றார். இதனை அங்கிருந்த போலீசார் தடுத்து அவரை அப்புறப்படுத்தினர் இதனால் மயக்க நிலைக்குச் சென்ற ராஜாவின் மனைவிக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மகளுக்கு நீதிகேட்டு தாய் தீக்குளிக்க முயன்றுள்ளார். தமிழகத்தில் தினந்தோறும் தி.மு.க'வினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது தீக்குளித்தால்தான் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களை கண்டு கொள்ளாமல் சட்டம்-ஒழுங்கு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என முதல்வர் வணங்குவதால் எந்தவித பயனும் இல்லை.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் அவர்களை கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பி.ஜே.பி தயங்காது' என எச்சரித்துள்ளார்
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரித்து உள்ளதால் இந்த விவகாரம் தற்பொழுது மீடியாக்கள் முன்பு பேசுபொருளாக மாறியுள்ளது அனைவரது கவனமும் இதில் குவிந்துள்ளது.