Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஓராண்டு ஆட்சியில் வேதனை மட்டுமே - எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க ஓராண்டு ஆட்சியில் வேதனை மட்டுமே - எடப்பாடி பழனிசாமி!

ThangaveluBy : Thangavelu

  |  7 May 2022 3:44 PM GMT

கடந்த அம்மா ஆட்சியில் பல்வேறு பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனால் மக்களும் பயனடைந்தனர். ஆனால் தற்போது தி.மு.க. அரசு சாதனை எதுவுமே நிகழ்த்தவில்லை. வேதனை மட்டும்தான் மக்களுக்கு கொடுத்திருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தி.மு.க.வின் ஒரு வருட ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற பணிகளைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒரு வருடத்தில் எந்த ஒரு புதிய திட்டமும் செயல்படுத்தவில்லை. கடந்த கால அம்மா ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனால் மக்களும் நன்மை அடைந்தனர். தற்போது எந்த ஒரு பிரச்சினையிலும் தி.மு.க. கவனம் செலுத்தவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News