Kathir News
Begin typing your search above and press return to search.

'நூல் விலை உயர்வு! பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்' - அண்ணாமலை உறுதி!

நூல் விலை உயர்வு! பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - அண்ணாமலை உறுதி!

ThangaveluBy : Thangavelu

  |  11 May 2022 11:05 AM GMT

பின்னலாடை தொழில்துறை சந்தித்திருக்கும் நூல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்து செல்வேன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிந்துள்ளார். அவரை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க போரம் நிர்வாகிகள், குமார், சக்திவேல், சிவா, பிரதீப் உள்ளிட்டோர் சந்தித்து நூல் விலை ஏறிவிட்டது குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக குமார் கூறியதாவது: தொழில்நிலை தொடர்பான விவரங்களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேட்டறிந்தார். துணி மற்றும் ஆடை உற்பத்தியாளரையும், புதிய கமிட்டியில் உறுப்பினராக சேர்ப்பதற்கு உரிய முயற்சி எடுக்கப்படும் என்றார். தற்போதைய நிலையில் ஜவுளித்தொழில் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளது. நூல் விலை உயர்வு கட்டுப்படுத்தி இந்தியாவின் ஏற்றுதியை 10 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு உறுதுணையாக இருப்பேன் எனவும், பின்னலாடை தொழில்துறை சந்தித்து நூல் விலை தொடர்பாக பிரதமர் கவனத்துக்கு எடுத்து செல்வதாக அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News