Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் அதிகாரியை மிரட்டும் தி.மு.க., கூட்டணி கட்சி: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

பெண் அதிகாரியை மிரட்டும் தி.மு.க., கூட்டணி கட்சி: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  19 May 2022 8:16 AM GMT

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நுழைந்து, தகாத வார்த்தைகளால் தன்னைப் பேசி மிரட்டியதாக அரசியல் கட்சி பிரமுகர் மீது பெண் அதிகாரி ஒருவர் பரபரப்பான புகார் அளித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

விழுப்புரம், தாட்கோ அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் அன்புதேவகுமாரி. இவரை நேற்று தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேரந்து மனு ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் பெண் அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த அரசியல் கட்சி பிரமுகர், பெண் அதிகாரியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளினால் திட்டினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது. உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News