Kathir News
Begin typing your search above and press return to search.

சாது மிரண்டால் காடு கொள்ளாது: தி.மு.க.வுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

சாது மிரண்டால் காடு கொள்ளாது: தி.மு.க.வுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 2:11 AM GMT

சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரைக் கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் இன்று போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கைது செய்யக்கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றுகூடி தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமீபகாலமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் யூடியூபர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூபர் மைனர் விஜய் என்பவர் சிதம்பரம் நடராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். இது ஒட்டுமொத்த சிவனடியார்களையும் காயப்படுத்தும் விதமாக அமைந்தது.

இதனை கண்டிக்கும் விதமாக சிதம்பரம் நகரத்தில் அனைத்து சிவனடியார்களும் ஒன்றுகூடினர். அவமரியாதையாக பேசிய யூடியூபரை கைது செய்யாத தி.மு.க. அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஒரே நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கூடியதால் சிதம்பரம் நகரமே ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரைக் கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆட்சியில் மக்கள் மன்றாடிதான் உரிமைகளைப் பெற முடியும், இன்று சாதுக்களையும் போராட்ட களத்தில் தள்ளியுள்ளது தி.மு.க. அரசு. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News