Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை! தி.மு.க. அரசு செயல் இழந்துவிட்டது: அண்ணாமலை!

இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை! தி.மு.க. அரசு செயல் இழந்துவிட்டது: அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  25 May 2022 2:07 AM GMT

சென்னை மாவட்ட பா.ஜ.க. பட்டியல் இன அணித் தலைவர் பாலசந்தர் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை!

தி.மு.க. அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமானிய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல்.

மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குப் தமிழக பா.ஜ.க. கட்சி அரணாக இருக்கும். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News