Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க மாவட்ட தலைவர் படுகொலை: மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத அரசு பதவி விலகலாம்! எஸ்.ஜி.சூர்யா கண்டனம்!

பா.ஜ.க மாவட்ட தலைவர் படுகொலை: மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத அரசு பதவி விலகலாம்! எஸ்.ஜி.சூர்யா கண்டனம்!

ThangaveluBy : Thangavelu

  |  25 May 2022 2:08 AM GMT

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் பாலசந்தர் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. மத்திய சென்னை எஸ்.சி. பிரிவு தலைவர் திரு.பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீசார் உடனிருந்துள்ளார்.

சென்னை 'கொலை நகரமாக' மாறி வருகிறது என்று சொல்லி வந்தோம். சட்டம் ஒழுங்கை காக்க திராணி இல்லாத, லாயக்கற்ற ஒரு முதல்வர் தான் இந்த மாநிலத்திற்கு தேவையா? அவரால் எம் மக்களுக்கு என்ன தான் பயன்? உடனடியாக இராஜினாமா செய்து விட்டு செல்லட்டும். இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News