Kathir News
Begin typing your search above and press return to search.

'கூலிக்கு மாரடிப்பவர்கள்' - பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. அமைச்சர்!

கூலிக்கு மாரடிப்பவர்கள் - பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க. அமைச்சர்!

ThangaveluBy : Thangavelu

  |  28 May 2022 2:36 PM GMT

பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசிய தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். மணி கன்ட்ரோல் எனும் தனியார் இணையதளத்தில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் சந்திரா ஆர். ஸ்ரீகாந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதாவது அவர் பதிவில், சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பரை சந்தித்ததாகவும், மிகவும் செல்வாக்கு மிக்க தலைவரின் மருமகன் ஒருவரால் அதிகளவில் நில அபகரிப்பு நடக்கிறது. குறிப்பிட்ட நபருக்குத்தான் நிலத்தை விற்க வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. சென்னையில் 5 கோடிக்கும் மேல் எந்த நிலத்தையும் விற்க முடியாது என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் ட்வீட் பதிவுக்கு தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு ட்விட் செய்துள்ளார். பெண் பத்திரிகையாளர் கூலிக்கு மாரடிப்பவர்கள் நீங்கள் என தரக்குறைவாக பேசி தனது வன்மத்தை ட்விட்டரில் கக்கியுள்ளார். பெண் பத்திரிகையாளர் அளித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் தனது பொறுப்பையும் மீறி நீங்கள் எல்லாம் கூலிக்கு மாரடிப்பவர்கள் அப்படித்தான் செயல்படுவீர்கள் என அமைச்சர் பதிவிட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source: Thamarai Tv

Image Courtesy: The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News