ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த தி.மு.க'வின் முரசொலி நாளேடு!
![ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த தி.மு.கவின் முரசொலி நாளேடு! ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த தி.மு.கவின் முரசொலி நாளேடு!](https://kathir.news/h-upload/2022/06/12/1371129-mmm.webp)
மதுரை ஆதீனத்தை மிரட்டும் வகையில் தி.மு.க.வின் நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது பற்றி அந்த நாளேடு வெளியிட்டுள்ள பதிவில், மதுரை ஆதீனம் இருப்பது தமிழ்நாடு! இந்த மண்ணில் பல சைவ ஆதீனங்கள் உள்ளன! அவை அனைத்தும் தங்கள் பணிகளை எந்தவித சலசலப்புமின்றி செய்து வருகின்றன! அவர்கள் மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார்! பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும். அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்!
காஞ்சி மடத்தில் அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்ன என்பதை அவர் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறோம். இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் முதல் மாநில, மத்திய அமைச்சர்கள் பலரும் அந்த காஞ்சி பீடத்துக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் பெயரை உச்சரிக்க கூடமாட்டார்கள், பெரியவாள், சின்னவாள் என்று பயபக்தியுடன்தான் அழைப்பாளர்கள்! அந்த சங்கராச்சாரியார் தரிசனம் கிடைப்பதே பெரும் பாக்யம் என்று நாட்டிலே பலர் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்துக் கிடப்பர்!
ஆனால் அவரையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை கம்பிகளை எண்ண வைத்தார். அவரது பெயருக்கு பல கெட்டப்பெயர்கள் ஏற்பட்டது. இவை அனைத்தையும் மதுரை ஆதீனம் உணர்ந்திருப்பார். இவை எல்லாம் மதுரை ஆதீனத்தை மிரட்ட தரும் தகவல்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். பிரதமர் மோடியிடம் செல்வேன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செல்வேன் என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதீனத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Murasoli
Image Courtesy: News 18 Tamilnadu