Kathir News
Begin typing your search above and press return to search.

'சமூக நீதி என்பது வேஷம் மட்டுமே' தி.மு.க. மீது அண்ணாமலை காட்டம்!

சமூக நீதி என்பது வேஷம் மட்டுமே தி.மு.க. மீது அண்ணாமலை காட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  24 Jun 2022 6:10 AM GMT

ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக சமூக நீதி என்று தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போடுகின்ற கோஷங்கள், நிஜமான வேஷங்கள் தான் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. சார்பில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரிசா மாநிலத்தின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பா.ஜ.க. ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் முன்மொழியப்பட்ட சரத்பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூர் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்டனர். குடியரசுத்தலைவராகப் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச தகுதியுள்ள வேட்பாளரை தேர்வு செய்ய இயலாமல், நேற்று வரை பா.ஜ.க.வில் இருந்த உயர்சாதி இனத்தவரான யஷ்வந்த் சின்ஹாவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவலநிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, என்று இதுவரை பேசிய தி.மு.க., திருமா, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்கப் போகின்றனர். இந்தியாவில் பத்துக்கோடிப் பேருக்கும் மேல் பழங்குடி இனத்தவர் இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட இதுவரை ஜனாதிபதி ஆனதில்லை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி.ஏ.சங்மாவை பா.ஜ.க. நிறுத்தியபோது வைதீகரான பிரணாப் முகர்ஜியை நிறுத்தி காங்கிரஸ் கட்சி பழங்குடியினத்தவரான சங்மாவைத் தோற்கடித்தது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்த பட்டியலைப்பார்த்தால் தெரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

தற்போது பா.ஜ.க.வின் சார்பில், மீண்டும் ஒரு பழங்குடியின வேட்பாளர். ஒரிசா மாநிலத்தின் ஒரு பெண்மணியை திருமதி. திரௌபதி முர்மு என்பவரை ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க. அடையாளப்படுத்தியிருக்கிறது. இம்முறை பா.ஜ.க.வின் பழங்குடியின வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், எதிர் அணியினர் வேட்பாளர் வெற்றிபெற முடியாது என்பது தெளிவான நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின், பழங்குடியினப் பெண் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்து, போட்டியின்றி வெற்றி பெற துணை நிற்க வேண்டாமா?

ஒரு பழங்குடியின வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதை எதிர்ப்பவர்களா சமூக நீதியின் காப்பாளர்கள். தி.மு.க.வும், காங்கிரசும் சமுதாயத்தில் அடிதட்டிலிருந்து மேலே வந்தால் கூட ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஆதரவு தருவார்கள். மற்றவர்கள் எப்போதும் போல தாத்தா காலத்தில் இருந்து வழிவழியாக போஸ்டர் ஒட்டுவதற்கும், அடுத்த தலைவர் வாழ்க என கோஷம் போடவும், அடிமட்ட வேலை செய்ய மட்டுமே இங்கு அனுமதி உண்டு.

கிருத்துவரை முன்னிருத்தினால்தான் ஆதரிப்பேன் என்ற திருமாவின் நிலை மாறிவிட்டதா? இந்திய ஜனாதிபதியாக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து, தங்களின் உயர்சாதி வகுப்பினரை போட்டியில் எதிராக நிறுத்தும், தி.மு.க., திருமா, காங்கிரஸ் கட்சிகளின் சமூகநீதி என்பது வாய்ச்சொல்லில் தான் இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் இருப்பது சமூகநீதியா சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.

உயர் சாதி வேட்பாளரை ஆதரித்து, பட்டியலினத்தின் மலையகமகளை மறுக்கும் தி.மு.க.வும், திருமாவும், காங்கிரசும், இனி சமூக நீதிக்கும் புதிய மாடல் உருவாக்க போகிறார்கள் போலும். தி.மு.க. எப்போதுமே தமிழுக்கு தாழ்நிலை மக்களுக்கும் சிறுபான்மை இனத்துக்கும், எதிராகத்தான் செயல்படும், தமிழ் என்பது பேச்சளவில் நின்றுவிடும். இதற்கு முன்னர் இதே குடியரசுத் தலைவர் தேர்தலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு ஓட்டு போடாமல் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணய்யருக்கு ஓட்டு போட்டது அப்புறம் சிறுபான்மைக் காவலராக காட்டிக் கொள்ளும் ஆனால், சிறுபான்மை இனத்தவரான, தமிழரான அப்துல்கலாமுக்கு ஓட்டு போடாமல் லஷ்மி செய்ஹலுக்கு ஓட்டு போட்டது. வழக்கம் போல் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக சமூக நீதி என்றெல்லாம் தி.மு.க., திருமா, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போடும் பல கோஷம் அதெல்லாம் வேஷம். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy:Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News