Kathir News
Begin typing your search above and press return to search.

"இது இந்து விரோத அரசாங்கம் தான்!" - தி.மு.க அரசை கடுமையாக விளாசிய அர்ஜுன் சம்பத்!

இது இந்து விரோத அரசாங்கம் தான்! - தி.மு.க அரசை கடுமையாக விளாசிய அர்ஜுன் சம்பத்!

DhivakarBy : Dhivakar

  |  5 July 2022 1:35 PM GMT

"இந்து கடவுள்களை அவமதிக்கும் நபர்களை கைது செய்யாத வரை, இந்த அரசாங்கம் இந்து விரோத அரசாங்கம் தான்" என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், தமிழகம் இந்து விரோத சம்பவங்களை சந்தித்து வருகிறது. தஞ்சை கிறிஸ்துவப் பள்ளியில் கட்டாய மதமாற்ற வற்புறுத்தலால் இந்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், இந்து கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகள் சேதப் படுத்தப்படுவது மற்றும் திருடப்படுவது, நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க கோயில்களிலுள்ள ஆகம விதிகளில் அரசு தலையிடுவது, என எண்ணற்ற இந்து விரோத சம்பவங்களை தமிழகம் சந்தித்து வருகிறது.


இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு அர்ஜுன் சம்பத், தமிழக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது: இந்த அரசு, என்றைக்கு தில்லை சிவபெருமானை அவமதித்த யூடியூபர் மைனர் விஜய்யை கைது செய்கிறதோ, மதுரையில் செஞ்சட்டை பேரணி என்ற பெயரில் சமயபுரம் மாரியம்மனையும் ஐயப்பனையும் இழிவுபடுத்தியவர்களை கைது செய்கிறதோ. அதுவரை இந்த அரசாங்கம் இந்து விரோத அரசாங்கம் தான்.

என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News