Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியில் போதை பொருள் விற்பனை ஜோராக நடக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

தி.மு.க. ஆட்சியில் போதை பொருள் விற்பனை ஜோராக நடக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2022 8:33 AM GMT

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது. ஏராளமான போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பான குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் மத்திய இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீலுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: அக்னிபத் திட்டம் பற்றிய புரிதல் இல்லாதவர்களே, டாஸ்மாக் மதுக்கடைகள், போதை பொருட்களை ஆதரிப்பவர்கள் எதிர்த்து வரும் நிலையில் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. போதை மயமாகிவிட்டது. அதே போன்று தமிழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது. ஒரு ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தேர்தல் நடைபெறுகிறது. அதனை தவிர்ப்பதற்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News