Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசு மீது மக்கள் மரியாதை இழந்து விட்டனர்! மாணவி மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை - அண்ணாமலை!

தி.மு.க அரசு மீது மக்கள் மரியாதை இழந்து விட்டனர்! மாணவி மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை - அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  17 July 2022 8:45 AM GMT

தி.மு.க., அரசு மற்றும் காவல்துறை மீது மக்கள் மரியாதை இழந்து விட்டனர் என்றும், உடனடியாக மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ., விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மாணவியின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டினர். மாணவியை கொலை செய்துவிட்டனர் என்று பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக நீதி வேண்டி தனியாக மாணவியின் பெற்றோர் போராடி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களும், மாணவர்களும் இணைந்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அந்த வகையில் இன்று நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இதனால் பள்ளி பேருந்துகள் மற்றும் போலீசாரின் வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். உரிய நீதி வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவியின் மரணம் பற்றி தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?

ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார், உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தமிழக பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News