அண்ணாமலையால் தூக்கம் தொலைத்த தி.மு.க அமைச்சர்கள்
அண்ணாமலை என்கின்ற வெப்ப சூறாவளியால் தி.மு.க அமைச்சர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர் என பா.ஜ.பட்டியல் அணி மாநில தலைவர் பெரியசாமி பேசினார்.
By : Karthiga
தமிழக பா. ஐ.க விற்கு கிடைத்திருக்கும் தலைவர் அண்ணாமலை என்னும் வெப்ப சூறாவளியால் தி.மு.க அமைச்சர்கள் தூக்கம் இன்றி தவிக்கின்றனர் என பா.ஜ. பட்டியல் அணி மாநில தலைவர் டி. பெரியசாமி பேசினார் .திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் நடந்த பா.ஜ.பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழ் தமிழ் என முழங்கும் தி.மு.க தலைமையை சேர்ந்த குடும்பத்தினர் நடத்தும் பள்ளியின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது.மாநிலத்தில் அரசு பள்ளிகளை தவிர எல்லா இடங்களிலும் ஹிந்தி படிக்க முடிகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் மும்மொழிக் கற்றவர்களாகவும் , மற்றவர்கள் இருமொழிக் கற்றவர்களாகவும் மற்றவர்களுக்கும் உள்ளதால் அவர்களின் அறிவுத் திறனில் பாகுபாடு ஏற்றத்தாழ்வு உள்ளது.
நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா கடன் இல்லாத நாடாக மாறியுள்ளது. பா.ஜ.க வின் கொள்கை தேசமும் தெய்வீகமும் மட்டுமே. இது குடும்ப கட்சி இல்லை யார் வேண்டுமானாலும் தலைவராகவோ, கவர்னராகவோ அமைச்சராகவோ வரமுடியும்.
உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழகத்தில் வயிற்றுப் பிழைப்பிற்காக கட்சி நடத்தும் சிலர் பட்டியல் இன மக்களை ஏமாற்றிய திராவிடம், சமூகநீதி, ஹிந்தி திணிப்பு, சனதானம் என குழப்புகின்றனர்.
அக்கட்சிகளில் இருப்போர் பா.ஜ.கவில் இணைய வேண்டும் அம்பேத்கர் புத்தகத்தில் ஒரே நாடு,ஒரே மொழி, நீர்மேலாண்மை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூபாய் நோட்டு மாற்றுதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தும் கட்சியாக உள்ளது தமிழக பா.ஜ.க கிடைத்துள்ள தலைவர் அண்ணாமலை ஒரு வெப்ப சூறாவளி அவர் அடுத்து என்ன ஊழல் வெளியீடு வரும் என தி.மு.க அமைச்சர்கள் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்,என்றார்.