Kathir News
Begin typing your search above and press return to search.

'அவங்க அடிச்சு பழகிட்டாங்க, நாங்க வாங்கி பழகிட்டோம்' - திமுக தலைவர்களிடம் கும்மாங்குத்து வாங்கும் தொண்டனின் குமுறல்

'அவங்க அடிச்சு பழகிட்டாங்க, நாங்க வாங்கி பழகிட்டோம்' என்பது போன்று திமுகவின் தொண்டர்களை தங்கள் கட்சி தலைவர்களால் அடிவாங்குவதும்

அவங்க அடிச்சு பழகிட்டாங்க, நாங்க வாங்கி பழகிட்டோம் - திமுக தலைவர்களிடம் கும்மாங்குத்து வாங்கும் தொண்டனின் குமுறல்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2023 6:08 AM GMT

'அவங்க அடிச்சு பழகிட்டாங்க, நாங்க வாங்கி பழகிட்டோம்' என்பது போன்று திமுகவின் தொண்டர்களை தங்கள் கட்சி தலைவர்களால் அடிவாங்குவதும் பதிலுக்கு சொல்ல முடியாமல் வாயில் துண்டை வைத்துக் கொண்டு திமுக தொண்டர்கள் குமுறுவது வாடிக்கையாகி வருகிறது.

சமீப சில ஆண்டுகளாக அரசியலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது, 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கல் அதிகம் இல்லாத காலத்தில் திமுக பொதுவெளியில் அத்துமீறி செய்த காரியங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை! வீடியோ கட்சிகளாவோ, செய்திகளாகவோ வெளிவரவில்லை! அப்படி வெளியிட்டு இருந்தால் திமுகவின் பேச்சுகளும், மேடை சம்பவங்களும் இன்றைக்கு ஆவணமாக இருந்திருக்கும்.

ஆனால் இன்று சமூக வலைத்தளங்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதால் இதில் அரசியல் செய்த பழக்கப்படாத திமுக தலைவர்கள் வழக்கம்போல அவங்க இஷ்டப்படி நடந்துகிறதால இப்ப அதிகளவில பொதுவெளியில் மக்களிடமும், தொண்டர்களிடமும் முறைதவறி நடந்துக்கிறது அப்பப்ப பரபரப்பாகிடுறது.

இன்னும் குறிப்பா சொல்லப்போனா திமுகவின் தலைவர்கள் பொதுவெளியில் மக்களை ஏளனமாக பேசுவதும், அடிப்பதும் குறிப்பாக தொண்டர்களை கைல கிடைகிறது எல்லாம் தூக்கி அடிக்கிறதும் வடிக்கையாகிட்டே வருதுங்க. அந்த வகையில் வெகு சமீபத்திய நிகழ்வாக நேற்று அமைச்சர் கே.என் நேரு உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தொண்டரை வெறிகொண்டு தாக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை போர்த்திக்கொண்டிருந்த சமயத்தில திமுக தொண்டர்களை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு இதே போன்ற சம்பவமாக இரு தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் அருகே ஆய்வுப்பணிக்கு சென்றபோது திமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் உட்காருவதற்கு நாற்காலி எடுத்து வர தாமதமானதால் தொண்டரின் மீது திமுக அமைச்சர் நாசர் கல்லை தூக்கி அடித்த வீடியோ இணையங்களில் தீயாக வலம் வந்தது. இது நடந்த ரெண்டே நாள்ல இன்னோரு திமுக தொண்டர் அடிவாங்கியிருக்காரு!


இன்னோரு சம்பவமா கடந்த மாதம் திருச்சி பெரிய மிளகு பாறை மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. அப்போது இதே அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கிட்டார். அப்போது கூட்டத்தில் பெண்களுக்கு தண்ணீர் பிடித்துக் கொடுக்க வேண்டும்ன்னு திருச்சி மாநகராட்சி 54வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ் பைப்பா திறந்து விட்டதும் கடுப்பான அமைச்சர் கே.என்.நேரு திமுக கவுன்சிலர் தலையில் ஓங்கி அடித்ததும் வீடியோவாகி இணையத்தில் வைரலானது.


இதுமாதிரியே கடந்த ஜூலை மாதத்தில் விருதுநகர் பாலா நத்தம் கிராமத்தில் மனு கொடுக்க வந்த பெண்மணியை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலையில் அடித்து கொடுமைப்படுத்தியதும் நடந்தேறியது.




இப்படி பண்ணையார்த்தனமா தொண்டர்களையும், பொதுமக்களையும் திமுகவினரின் ஆளுங்கட்சி என்ற ஆணவத்தில் கேவலமாகவும், மரியாதை குறைவாகவும் நடத்தி அரசியல் செய்றது பொதுமக்கள் மத்தியில முகம் சுளிக்க வச்சுருக்கு!

'உள்ளே அழுகிற வெளியே சிரிக்கிறன்' என்ற பாடல் வரிகள் போல் யாருக்கு பொருந்துதோ இல்லையோ திமுக தலைவர்கள் கிட்ட அடிவாங்குறவங்களுக்கு கண்டிப்பா பொருந்தும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News