Kathir News
Begin typing your search above and press return to search.

எதிரி திமுகதான் - அதிமுக ஒற்றுமைதான் அதற்கு சரியான ஆயுதம், அண்ணாமலை போட்ட அதிரடி திட்டம்

எதிரி திமுகதான் - அதிமுக ஒற்றுமைதான் அதற்கு சரியான ஆயுதம், அண்ணாமலை போட்ட அதிரடி திட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Feb 2023 1:50 AM GMT

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று பாஜக அதிமுகவின் ஒற்றுமைக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அப்படி இரட்டை இலை சின்னம் முடங்குவதால் அது தற்பொழுது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக முடியும் எனவும் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறக்கூடாது எனவும் பாஜக போராடி வருகிறது.

இதையடுத்தே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது.

இருவரையும் சந்தித்த அண்ணாமலை - சி டி ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் சிடி ரவி அளித்த பதிலில், பிப்ரவரி 7ம் தேதி வரை பொறுமையாக இருக்க வேண்டும் எனவும், திமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதாவும் ஆகிய இருவர்களும் தீய சக்தி என்று கூறினார். அந்த தீய சக்திக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. மக்கள் நாளுக்கு நாள் திமுக மீதான ஆதரவை இழந்து வருகிறார்கள்.

அதிமுக எதிர்க்கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும். திமுக கூட்டணியை அப்போதுதான் எதிர்க்க முடியும். எதிர்க்கட்சியாக தனி தனியாக நிற்காமல் ஒன்றாக நில்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதுதான் பாஜகவின் விருப்பம். டெல்லியின் விருப்பம் அதுதான். எதிர்க்கட்சியாக நாம் ஒன்று இணைய வேண்டும் என்று கூறி உள்ளோம்.

திமுகவை வீழ்த்த, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் நிலை, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அனுப்பிய செய்தியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் எடுத்துரைத்தோம். அது என்ன என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது' என்று சிவி ரவி கூறினார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? பாஜக போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு சிடி ரவி.. பிப்ரவரி 7ம் தேதி வரை நமக்கு நேரம் இருக்கிறது என்று மழுப்பலாக கூறினார்.

இதையடுத்து மீண்டும் ஒரு செய்தியாளர் ஒருவர்.. அதிமுக நிலைப்பாடு இருக்கட்டும்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன.. நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டார். இதற்க்கு பதிலளித்த சிடி ரவி.. பிப்ரவரி 7ம் தேதி வரை நேரம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம், அப்டின்னு சொல்லிருக்காரு.

ஆக மொத்தத்துல இப்ப இருக்கும் நிலையில் பாஜக வேட்பாளரை நிறுத்துறதை விட அதிமுக பிளவு இல்லாம ஒரே அணியில் வேட்பாளரை நிறுத்தினால் கண்டிப்பா மக்கள் மத்தியில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெரும்! அதே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இந்த ரெண்டுபேரும் போட்டி போடுறது அது திமுகவுக்குத்தான் சாதகமா முடியும்'ன்னு அண்ணாமலை எப்பவோ கணிச்சுட்டாருங்க, இதனாலதான் அதிமுக பிரியமா ஒரே அணியில் நிற்கணும்னு இவ்ளோ மெனக்கெடுறாங்க. நமக்கு எதிரி திமுக தான் தவிர, அதிமுக பிளவோ, இரட்டை இல்லை சின்னம் முடக்கமோ நமக்கு பலன் தராது அப்டின்னு அண்ணாமலை நல்லாவே புரிஞ்சுட்டு இருக்காருங்க!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News