Kathir News
Begin typing your search above and press return to search.

'ஸ்டாலின்தான் வராரு! குக்கர் கொடுக்க போறாரு' - நம்ம தொகுதிக்கு எப்ப இடை தேர்தல் வருமோ என மக்களை ஏங்கவைக்கும் ஈரோடு கிழக்கு!

ஸ்டாலின்தான் வராரு! குக்கர் கொடுக்க போறாரு - நம்ம தொகுதிக்கு எப்ப இடை தேர்தல் வருமோ என மக்களை ஏங்கவைக்கும் ஈரோடு கிழக்கு!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Feb 2023 2:58 AM GMT

இதுவரை திமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது, திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வரை பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். இப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆட்சியில் உள்ள அடுத்த மூன்று ஆண்டு காலத்தில் அரசியல் கட்டமைப்பை நிறுவுவதற்காக திமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும், எதிர்கட்சிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக முழுமூச்சுடன் போராடி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளில் கூட்டணி பலமாக இருப்பதாலும் மக்கள் மத்தியில் பின்னடைவை சந்திக்க வாய்ய்புகள் இருக்கின்றன என்ற உளவுத்துறை கொடுத்த ரிப்போட்டின் அடிப்படையிலும் திமுக எப்படியாவது இந்த தேர்தலில் ஜெயிச்சாக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்திலோ களத்தில் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி, அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ள கடுப்பு, டாஸ்மாக் கடை ஊழியர்கள் மத்தியில் உள்ள வெறுப்பு என திரும்பும் இடமெல்லாம் வெறுப்பை சம்பாதித்திருக்கும் திமுக அரசு நாம் வெற்றிபெற குறுக்கு வழியை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு பணம், சாப்பாடு என இதுநாள் வரை வாரி இறைத்த திமுக இன்று ஒருபடி மேலே சென்று குக்கர், கொலுசு வழங்க துவங்கியுள்ளது.

இத்தனை நாள் வரை அடைத்து வைக்க 500 ரூபாய், கூட்டத்திற்கு 800 ரூபாய், கொடி பிடித்து செல்ல 1000 ரூபாய், என ஜரூராக நடந்த இடைத்தேர்தல் களம் தற்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கையாக வெள்ளி கொலுசு மற்றும் குக்கர் போன்றவற்றை கொடுக்கும் பணிக்கு முன்னேறியுள்ளது. இது தொடர்பாக இன்று வீடியோ என்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவில் இருக்கும் தாய்மார்கள் எங்களுக்கு குக்கர் கொடுத்தார்கள் என்றும், கை சின்னத்திற்கு வாக்களிக்க சொல்லி வீட்டுக்கு ஒரு குக்கர் கொடுத்துள்ளார்கள்' என்றும் கூறுகிறார்.


மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் கடந்த 10 நாட்களாக செலவு செய்து வந்த திமுக தரப்பு தற்பொழுது குக்கர் மற்றும் வெள்ளி கொலுசு போன்றவற்றின் ஈரோடு கிழக்கு தொகுதியை பார்த்து மற்ற தொகுதி மக்கள் ஏக்க பெருமூச்சு விடும் அளவிற்கு மாறிவிட்டது.

இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு ஈரோடு கிழக்கு இடைதேர்தல் குறித்து தெரிவிக்கையில், 'இதுவரைக்கும் எங்களுக்கு ஈரோடு இடை தேர்தலை நிறுத்துவதற்கான புகார் வரவில்லை' என கூறியுள்ளார். அவ்வாறு 25ஆம் தேதி பிரச்சாரம் முடிவதற்குள் புகார் வரும் பட்சத்தில் தேர்தலை நிறுத்துவதற்கும் வரைமுறைகள் உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News