Kathir News
Begin typing your search above and press return to search.

ஏன்ப்பா அவசரப்படுறீங்க பில்லோட சேர்த்து மொத்த ஜாதகமும் ரெடி'ப்பா - பல தலைகளை காலிசெய்யபோகும் அண்ணாமலை ஊழல் பட்டியல்

ஏன்ப்பா அவசரப்படுறீங்க பில்லோட சேர்த்து மொத்த ஜாதகமும் ரெடிப்பா - பல தலைகளை காலிசெய்யபோகும் அண்ணாமலை ஊழல் பட்டியல்

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2023 8:55 AM GMT

'என்னப்பா பில்லு தானே வேணும் இருங்கப்பா ஊழல் பட்டியலோட சேர்த்து அனுப்புறேன்' என அண்ணாமலை தனது முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்.

தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது, குறிப்பாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் பட்டியல் ஒன்று வெளியாகப்போகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியபடி திமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் சொத்து பட்டியல், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியல் போன்றவற்றை அண்ணாமலை வெளியிட போகிறேன் என கூறியதுமே அரசியலில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலையை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் என்ன விலை, அது யார் மூலமாக வாங்கினார் போன்ற விவரங்களை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினர். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.

இதற்க்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது, 'நான் காவல்துறை அதிகாரியாக இருந்து நேர்மையான முறையில் சம்பாதித்தேன் அதற்க்கு வரியும் காட்டியுள்ளேன், அதற்கான அனைத்து ரசீதுகளை உள்ளது. இந்த வாட்ச் வாங்கிய பில் கூட உள்ளது, அதற்கான பில்லை நான் வரும் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக வெளியிடுவேன் அப்போது வாட்ச் பில் மட்டுமல்லாமல் ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறினார்.

மேலும், 'எனது வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் வரும். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். அதைப் பார்த்து, நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும். எனவே ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த சொத்து பட்டியல் முழுவதும் இணைய தளத்தில் வெளியிடுவோம். அதன் நகல் பென்டிரைவ் டிவில் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும்.

எனது 10 ஆண்டு வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்தும் அதில் வரப் போகிறது. அதை பார்த்ததற்கு அப்புறம் 420 யார் என்று தெரியும். அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம்' என ஒரே அடியாக அடித்தார்.

இந்த நிலையில் தற்பொழுது திமுக தரப்பில் எங்கே அண்ணாமலை வாட்ச் பில்? ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது வாட்ச் பில் இன்னும் வரவில்லை? இன்னும் காணோமே என்கின்ற திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேச துவங்கி விட்டனர், இவ்வளவே என் சமீபத்தில் பாஜகவில் இருந்து சென்ற ஒரு சிலர் கூட எங்கே இன்னும் அண்ணாமலை வாட்ச் பில் கொடுக்கவில்லை என்பது போன்ற கேள்விகளை அதிகம் கேட்டு வந்தனர், இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக அண்ணாமலை நெத்தியடி பதில் ஒன்றை கூறியுள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், 'ஏப்., 14ல் தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியல் மற்றும் ரபேல் கடிகாரத்திற்கான பில் வெளியிடப்படும். அந்த ஊழல் பட்டியலில் திமுக பிரமுகர்கள் குவித்து வைத்துள்ள சொத்துக்கள் அவர்கள் குடும்பத்தின் பெயரில் உள்ள சொத்துக்கள், அவர்கள் பெயரில் உள்ள நிறுவனங்கள், அவர்கள் வாங்கி குவித்துள்ள அயல்நாடு சொத்துக்கள், அவர்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கு அதில் குவித்து வைத்துள்ள மாபெரும் தொகை போன்ற அனைத்தும் வெளியிடப்படும் என கூறியுள்ளர்.

கடந்த 3 நாட்களாக சமூக வலைத்தளத்தில் அண்ணாமலையை விமர்சிக்கிறேன் என பில் எங்கே என நக்கலடித்த சிலருக்கு இதன் மூலம் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலில் தமிழகத்தில் 2024 தேர்தலில் போட்டியிடும் சிலரின் பெயர்கள் இருப்பதாகவும் அவர்கள் பெயர் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டால் அது அமலாக்கத்துறை வரை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. அப்படி அமலாக்கத்துறை வரை சென்று நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அவர்கள் 2024 தேர்தலில் போட்டியிடாத சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது. இப்படி இக்கட்டான சூழலை சிலருக்கும் அண்ணாமலை வெளியிடப்போகும் பட்டியல் ஏற்படுத்தவிருக்கிறது.

மேலும் தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மற்றும் 2024 தேர்தலை நோக்கிய பயணத்தில் அண்ணாமலை வெளியிடப்போகும் இந்த பட்டியல் கண்டிப்பாக அதிர்வலைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சிலர் சிறை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

மேலும் அண்ணாமலை தமிழக பாஜக தற்போது இருக்கும் நிலை மற்றும் வருங்காலத்தில் செய்ய வேண்டியது குறித்து அமித்ஷாவிடம் இரண்டு மணி நேரம் இது குறித்து பேசி உள்ளார். தமிழகத்தில் 25 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதையும் அண்ணாமலை அப்போது கூறினார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு பற்றி அண்ணாமலை கூறியதாவது, 'கூட்டனி குறித்து அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. ஆனால் கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா மற்றும் நட்டா போன்றோர் தான். 2024, 2026, 2030 போன்ற தேர்தல்கள் எப்படி இருக்கும் என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறேன்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் கிளீன் பாலிடிக்ஸை பார்ப்பீர்கள் . தேசியத் தலைவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். அதிமுக கூட்டணியில் உள்ள கொள்கை, எங்கு நிற்க வேண்டும், எத்தனை சீட்டுகள் என்பதில் தான் வாதம் செல்கிறது. எதுவும் இங்கே கல்லில் எழுதப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறேன் அவ்வளவுதான்' என தெளிவாக கூறினார்.

இப்போதைக்கு தமிழக அரசியலில் எதிர்பார்ப்பாக இருப்பது அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல் பட்டியல்தான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News