Kathir News
Begin typing your search above and press return to search.

"யாரோ பெத்த புள்ளைக்கு நீ ஏன் பேர் வைக்குற" - போகிற போக்கில் ஆ.ராசாவிற்கு ஒரு காட்டு காட்டிய அண்ணாமலை

யாரோ பெத்த புள்ளைக்கு நீ ஏன் பேர் வைக்குற - போகிற போக்கில் ஆ.ராசாவிற்கு ஒரு காட்டு காட்டிய அண்ணாமலை

Mohan RajBy : Mohan Raj

  |  29 May 2023 2:35 PM GMT

நான் எத்தனை மணிவரைக்கும் லைட் போட்டு படிச்சேன்னு உனக்கு தெரியுமான்னு திமுக எம்.பி எ.ராசாவை ஒரு கட்டு காட்டியுள்ளார் அண்ணாமலை!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராளுமன்றத்தில் வைக்கப்போகும் செங்கோல், செந்தில் பாலாஜி வீட்டில் நடந்து வரும் ரெய்டு, டிஎம்கே பைல்ஸ் இரண்டாம் பாகம், திருப்பூண்டியில் நடந்த ஹிஜாப் பிரச்சனை போன்ற அனைத்திற்கும் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் திமுக எம்பி ஆ.ராசாவிற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார் அண்ணாமலை. குறிப்பாக அவர் கூறியது என்னவென்றால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு பின்னணியில் கருணாநிதி பேனா மை இருக்கிறது என்கிறார்கள்? யார் பெத்த பிள்ளைக்கோ நீங்கள் ஏன் இனிஷியல் போடுகிறீர்கள்? அப்படி அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு பின்னணியில் கருணாநிதி மை தான் இருக்கிறது என்றால் கருணாநிதி குடும்பத்தில் ஏன் யாரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகவில்லை? ஆ.ராசா குடும்பத்தில் ஏன் யாரும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகவில்லை? சும்மா வாய்க்கு வந்தபடி எல்லாம் ஏதேனும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை.

மேலும் அண்ணாமலை கூறியதாவது, DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News