Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுமிக்கு திருமணம் என்று பத்திரிகை அச்சடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி!

சிறுமிக்கு திருமணம் என்று பத்திரிகை அச்சடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி!

ShivaBy : Shiva

  |  11 March 2021 5:34 AM GMT

வீட்டு வேலைக்கு வர மறுத்தால் மூதாட்டியின் 17 வயது சிறுமிக்கு திருமணம் என்று போலியான பத்திரிக்கை அச்சடித்து விநியோகம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.










புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியாக இருந்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவர் தனது வீட்டில் முத்துமணி என்ற விதவைப் பெண்ணை வேலைக்காக அமர்த்தியுள்ளார். கடந்த ஆறு மாதமாக சுந்தரமூர்த்தி வீட்டில் வேலைபார்த்து வந்த முத்துமணி தனது பெண் வீட்டில் தனியாக இருக்கிறாள் என கூறி சுந்தரமூர்த்தி வீட்டிற்கு வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரமூர்த்தி முத்துமணியை தனது வீட்டிற்கு வேலைக்கு வருமாறு வற்புறுத்தி உள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் தன் பெண்ணை காரணம் காட்டி வேலைக்கு வர மறுத்த முத்துமணியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் என்று அச்சடித்து சுந்தரமூர்த்தி கொடுத்துள்ளார்.

முத்துமணி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற சுந்தரமூர்த்தி அங்கு போலியாக அச்சடிக்கப்பட்ட பத்திரிகையை வீட்டில் வைத்துவிட்டு முத்துமணியின் வீட்டிலிருந்த ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை திருடிச் சென்றுள்ளதாக அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் இதனை வெளியில் கூறினால் தன்னைக் கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

17 வயது சிறுமிக்கு திருமணம் என்று பத்திரிக்கை அச்சடித்து விநியோகம் செய்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி மீது ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவம் ஆலங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News