Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வேட்பாளர்களை விரட்டியடிக்கும் பெண்கள் - மூன்றாம் தர பேச்சிற்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டதன் பின்னனி!

தி.மு.க வேட்பாளர்களை  விரட்டியடிக்கும் பெண்கள் -   மூன்றாம் தர பேச்சிற்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டதன் பின்னனி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2021 9:00 AM IST

தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி அவர்களை மூன்றாம் தரமாக விமர்சித்த விவகாரத்தில் தி.மு.க எம்.பி ஆ.ராசா நேற்று பொது மன்னிப்பு கேட்டார். இதன் பின்னனியில் தி.மு.கவின் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மகளிர் எதிர்ப்பு அதிகமாக இருந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.

இந்த அருவருப்பான பேச்சிற்கு தமிழகத்தில் பல இடங்களில் பெண்கள் போராட்டம் செய்தனர், கட்சி பாகுபாடின்றி தலைவர்கள் தி.மு.கவின் ஆ.ராசாவின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ஆ.ராசா மன்னிப்பு கோருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதன் பின்னனியில் மனிதாபிமானம் கிடையாது தி.மு.க தலைவர்கள் செல்லும் இடமெல்லாம் மகளிர் எதிர்ப்பு வருகின்ற காரணத்தால் தேர்தல் சமயத்தில் மகளிர் வாக்குகளுக்கு விபரீதம் ஆகி விட கூடாது என்ற காரணமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் பிரசாரத்துக்கு சென்ற தி.மு.க வேட்பாளர்களான திருப்பத்துார் நல்லதம்பி, ஜோலார்பேட்டை தேவராஜ், ஆம்பூர் வில்வநாதன், அணைக்கட்டு நந்தகுமார் குடியாத்தம் அமலு, சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம் ஆகியோர் பெண்கள் எதிர்ப்பால் வாக்கு சேகரிக்க இயலாமல் சேகரிக்காமல் திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து தி.மு.க சார்பில் ஆ.ராசா மன்னிப்பு கேட்பது மட்டுமே வழி வேறு வழியில்லை என்ற காரணத்தால் ஆ.ராசா மன்னிப்பு கோரியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News