பழைய சொம்பு திருடியதாக தி.மு.க அம்பத்தூர் வேட்பாளர் மீது வழக்கு - சொம்பையும் விட்டு வைக்காத தி.மு.கவினர்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வழக்கு விவரங்களை சட்டப்படி தெரிவிக்க வேண்டும் ஏனெனில் குற்ற பின்னனி வாக்களிக்கும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி விதி இருக்கையில் சில வேட்பாளர்களின் மீதுள்ள வழக்குகள் பெரிய குற்ற பின்னனி வழக்குகளாகவும், கிரிமினல் வழக்குகளாகவும் இருப்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு தி.மு.க வேட்பாளருக்கு 6000 மதிப்புள்ள செம்பு திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
தி.மு.க'வின் அம்பத்தூர் வேட்பாளராக ஜோசப் சாமுவேல் நிறுத்தப்பட்டுள்ளார். 58 வயதான இவர் வியாபாரம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவரின் சொத்து மதிப்பு 13,801,888 எனவும் இவரின் கடன்கள் 296,300 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆவணத்தில் முக்கிய அம்சமாக இவரின் மேலுள்ள காவல்துறை வழக்கு இவர் 6000 ரூபாய் பழைய சொம்பு திருடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைத்தும் அவரின் "அஃபிடவிட்" எனப்படும் ஆவணங்களில் முறையாக பதிவேற்றப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு, கொள்ளை, ஊழல், ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, மிரட்டல் வரிசையில் சொம்பு திருடிய வழக்கில் தி.மு.க வேட்பாளர் ஈடுபட்டிருப்பது வாக்காளர்களுக்கு அதிர்ச்சியையும், தி.மு.க'வினருக்கு பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்ற பின்னனியை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள உதவும் இந்த வழிமுறையில் வேட்பாளர்கள் எந்தளவிற்கு தரைமட்டமான வழக்குகளில் எல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என தகவல் கிடைப்பது அந்த வேட்பாளரையும், அவர் சார்ந்த கட்சியையும் சீர்தூக்கி பார்க்க உதவுவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பறிமாறப்படுகின்றன.